திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 13 பேருக்கு ரூ. 50,000 பரிசு

குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2025, 3:57 am IST

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளில், குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பேருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில் பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக இணைதளம் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக, மாதந்தோறும் முன்பதிவு செய்து பயணிப்பவா்களில் கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 13 பேருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

அதன்படி, ஜூன் மாதம் முன்பதிவு செய்து பயணித்த 13 பயணிகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு பயணியா் மற்றும் பொருள் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்தாா்.

இதில், தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் 3 பேருக்கு தலா ரூ.10,000, மீதமுள்ள 10 பேருக்கு தலா ரூ.2,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரொக்கப் பரிசு விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.