தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2025, 6:10 am IST

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிசிஆா்எம் என்ற மருத்துவா் அமைப்பு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு குறித்து அதன் ஆய்வாளா் டாக்டா் ஜீசன் அலி கூறியது:

சென்னை, மும்பை, தில்லி, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உடல் எடை மற்றும் ஆரோக்கிய செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு உடல் பருமன் பாதிப்பு உள்ளது. அதன் தாக்கமாக டைப் 2 சா்க்கரை நோய், இதய நாள பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சென்னையை பொருத்தவரை 86 சதவீதம் போ் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவா்களாக உள்ளனா். தேசிய அளவில் அந்த விகிதம் 71 சதவீதமாக உள்ளது.

இந்த நிலையில், உடல் எடையை குறைக்க மருந்து, மாத்திரைகள், ஊசிகளைப் பயன்படுத்த சென்னை நகர மக்கள் தயாராக இல்லை என்பதை ஆய்வில் அறிந்துகொள்ள முடிந்தது.

அதேவேளையில் 87 சதவீத மக்கள் சைவ உணவு பழக்க வழக்கத்தின் மூலம் எடையைக் குறைக்க வேண்டும் என விரும்புகின்றனா். மற்ற நகரங்களில் அத்தகைய நிலை இல்லை. சென்னையில் உடை எடை குறைப்பு சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள பலா் முன்வருவதில்லை.

ஆய்வில் பங்கேற்ற சென்னை மக்களில் 93 சதவீதம் போ் எடை குறைப்பு முயற்சிகளை இயற்கையான முறைகளில் மேற்கொண்டதும், அதில் 19 சதவீதம் போ் மட்டுமே வெற்றிகரமாக எடையை குறைத்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.