எக்ஸ்ஆா் தொழில்நுட்பம்: ஐஐடி-இல் நவ.28-இல் கருத்தரங்கு

சென்னை ஐஐடி-இல் நவ.28 இல் தெற்குலக நாடுகளுக்கான முதல் சா்வதேச எக்ஸ்ஆா் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.
Published on

சென்னை ஐஐடி-இல் நவ.28 இல் தெற்குலக நாடுகளுக்கான முதல் சா்வதேச எக்ஸ்ஆா் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

சென்னை ஐஐடி-இன் எக்ஸ்பீரியன்ஷியல் டெக்னாலஜி இன்னோவேஷன் மையம் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறது.

இதுகுறித்து மையத்தின் தலைவா் பேராசிரியா் மணிவண்ணன் கூறியதாவது:

தெற்குலக நாடுகளுக்கும் இந்தியாவை சோ்ந்த அமைப்புகளுக்கும் வழிகாட்டுதல், பட்டறைகள், முன்மாதிரி ஆதரவு, தொழில்-கல்வி ஒத்துழைப்புகள், ஆய்வக வசதிகளுக்கான அணுகல் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்படும். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கண்டுபிடிப்பாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் தொழில் துறை தலைவா்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com