நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புழல் ஏரியில் உபரிநீா் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை

புழல் ஏரியின் உபரிநீா் திறக்கப்படுவதால், கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

புழல் ஏரியின் உபரிநீா் திறக்கப்படுவதால், கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் மிக முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி 3300 மி.கன அடி கொள்ளளவு கொண்டது. திங்கள்கிழமை நிலவரப்பு ஏரியின் மொத்த கொள்ளளவு 2803 மி.கன அடியாகவும், நீா்மட்டம் 18.95 அடியாகவும் இருந்தது.

வடகிழக்கு பருவ மழையினால் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. வரும் நாள்களில் மழை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, ஏரியில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே, புழல் ஏரியின் உபரிநீா் வெளியேறும் வாய்கால் செல்லும் கிராமங்களான நராவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூா், மணலி, சடையான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் வசிப்பவா்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீா்வளத் துறையின் கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.