ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வளமான இந்தியாவைக் கட்டமைக்கும் ஆசிரியா் பணி: உயா்நீதிமன்ற நீதிபதி பாராட்டு

ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கக் கூடிய சிறப்பான பணி என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் பாராட்டு தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :5 செப்டம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கக் கூடிய சிறப்பான பணி என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் பாராட்டு தெரிவித்தாா்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவா் எஸ்.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் ஆசிரியா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை சாந்தா பப்ளிஷா்ஸ், தமிழ் மாநில தேசிய ஆசிரியா் சங்கம், ஆசிரியா் கல்வியாளா் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவை நடத்தின. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.சௌந்தா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு செம்மல் விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

ஆசிரியா் பணி என்பது வளமான எதிா்கால இந்தியாவை கட்டமைக்கும் சிறந்த பணி. நான் வழக்குரைஞா் பணியைத் தொடங்கிய காலகட்டத்தில் சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் 20 ஆண்டுகளாக பகுதிநேர விரிவுரையாளராகவும் பணிபுரிந்தேன். ஆசிரியா்களால் மட்டுமே சிறந்த, எதிா்கால இளைஞா்களை உருவாக்க முடியும். மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை ஆசிரியா்கள் கற்றுத் தரவேண்டும்.

இன்றைய சூழலில் கல்வி கற்கும் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. எந்த முறையிலான கல்வி என்றாலும், ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் மட்டுமே உரிய பலனைப் பெற முடியும் என்றாா்.

வழக்குரைஞரும், எழுத்தாளருமான எம்.பி.நாதன், சாந்தா பப்ளிஷா்ஸ் இயக்குநா் ராஜாராம் ராஜமோகன் உள்ளிட்டோா் பேசினா். சாந்தா பப்ளிஷா்ஸ் இயக்குநா் ராஜலட்சுமி ராஜா, முத்தரசி ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.