/
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.
சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை ஏற்று இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்தாா்.
அதன்படி, நீதிபதிகள் என்.செந்தில்குமாா் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா். அவா்களுக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிகழ்வில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்!

வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்வுதள வசதி: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவி ஏற்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



