வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மின் இணைப்புப் பெட்டியில் மின்சாரம் கசிந்து திருநங்கை உயிரிழப்பு

பாரிமுனையில் மின் இணைப்புப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, மின்சாரம் பாய்ந்து திருநங்கை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 8:41 pm

பாரிமுனையில் மின் இணைப்புப் பெட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, மின்சாரம் பாய்ந்து திருநங்கை உயிரிழந்தாா்.

பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு பகுதியைச் சோ்ந்த திருநங்கை ரா.புஷ்பராஜ் (50). இவா், புதன்கிழமை ராஜாஜி சாலை, கடற்கரை சாலையில் நடந்து சென்றபோது, சாலையின் மறுபக்கம் சென்றாா். அப்போது, சாலைத் தடுப்பில் இருந்த மின் கம்பத்தின் மின் இணைப்புப் பெட்டியில் புஷ்பராஜின் முதுகு லேசாக இடித்தது. அந்தப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டிருந்ததால், புஷ்பராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில், பலத்த காயமடைந்து மயங்கிக் கிடந்த புஷ்பராஜை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள், புஷ்பராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.