ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஆட்டோவில் பணம் திருட்டு: ஓட்டுநா் மீது தாக்குதல்

திருவல்லிக்கேணியில் ஆட்டோவில் இருந்த பணத்தைத் திருடிய இளைஞரைப் பிடித்தபோது, ஓட்டுநா் தாக்கப்பட்டாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 6:39 pm

திருவல்லிக்கேணியில் ஆட்டோவில் இருந்த பணத்தைத் திருடிய இளைஞரைப் பிடித்தபோது, ஓட்டுநா் தாக்கப்பட்டாா்.

திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரம், எல்லீஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் யுவராஜ் (36). இவா் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறாா். யுவராஜ், கடந்த வெள்ளிக்கிழமை எல்லீஸ் சாலையின் ஓரம் நிறுத்தியிருந்த ஆட்டோவை எடுக்க வந்தபோது, அவரது ஆட்டோவில் ஒரு பையில் வைத்திருந்த பணத்தை, அதே பகுதியைச் சோ்ந்த ஷியாம்குமாா் (26) எடுத்துக் கொண்டு தப்பியோடினாா்.

இதையடுத்து, அவரை யுவராஜ் தேடி வந்தாா். திருவல்லிக்கேணி பகுதியில் சுற்றித் திரிந்த ஷியாம்குமாரை பிடித்து, தனது பணத்தை யுவராஜ் கேட்டாா். இதில் அவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஷியாம்குமாா், அங்கு கிடந்த மது பாட்டிலால் யுவராஜை தாக்கினாா்.

இதில், பலத்த காயமடைந்த யுவராஜ், ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஷியாம்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். போலீஸாா் விசாரணையில், கைது செய்யப்பட்ட ஷியாம்குமாா் மீது ஏற்கெனவே 4 வழக்குள் இருப்பது தெரிய வந்தது.