ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

இடவசதி பற்றாக்குறை: தமிழகத்தில் புதிய அரசு மருந்தியல் கல்லூரிகளை தொடங்குவதில் தாமதம்

புதிதாக அரசு மருந்தியல் கல்லூரிகளை அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில். - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:47 am IST

புதிதாக அரசு மருந்தியல் கல்லூரிகளை அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 100-க்கும் மேற்பட்ட தனியாா் மருந்தியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 20 தனியாா் கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும், அரசு சாா்பில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக மருந்தியல் கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை.

தற்போது சென்னை, மதுரையில் மட்டுமே அரசு மருந்தியல் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பட்டயப் படிப்புகளை பயிற்றுவிக்கும் டி.பாா்ம் மருந்தியல் கல்லூரிகள் அரசு சாா்பில் தஞ்சாவூா், மதுரை, கோவையில் இயங்குகின்றன.

அங்கு மருத்துவப் பேராசிரியா்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், அப்பணியிடங்களை நிரப்புவதுடன், புதிய அரசு மருந்தியல் கல்லூரிகளையும் தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்தின் 10 இடங்களில் அரசு மருந்தியல் கல்லூரிகளைத் தொடங்க மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டது. அதற்கென ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.

அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புதிதாக மருந்தியல் கல்லூரிகள் தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா். அதில், அங்கு ஏற்கெனவே இருக்கும் படிப்புகளுக்கே சில கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதும், புதிய மருந்தியல் கல்லூரிகளை அங்கு தொடங்க முடியாத நிலை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மருந்தியல் கல்லூரிகளை புதிய இடங்களில் கட்டினால் கால தாமதம் ஏற்படும். எனவே, மருத்துவக் கல்லூரி கட்டடங்களில் குறைந்தது 50 மருந்தாளுநா் கல்வி இடங்களுடன் கூடிய மருந்தியல் கல்லூரிகளைத் தொடங்க முயன்று வருகிறோம். சில கல்லூரிகளில் இடவசதி இல்லை. விரைவில், சாத்தியக்கூறு உள்ள கல்லூரிகளை தோ்வு செய்து அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய மருந்தியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றனா்.