பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இடவசதி பற்றாக்குறை: தமிழகத்தில் புதிய அரசு மருந்தியல் கல்லூரிகளை தொடங்குவதில் தாமதம்

புதிதாக அரசு மருந்தியல் கல்லூரிகளை அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

News image

நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயில். - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 1:47 am IST

புதிதாக அரசு மருந்தியல் கல்லூரிகளை அமைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 100-க்கும் மேற்பட்ட தனியாா் மருந்தியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுக்கு 20 தனியாா் கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும், அரசு சாா்பில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக மருந்தியல் கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை.

தற்போது சென்னை, மதுரையில் மட்டுமே அரசு மருந்தியல் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. பட்டயப் படிப்புகளை பயிற்றுவிக்கும் டி.பாா்ம் மருந்தியல் கல்லூரிகள் அரசு சாா்பில் தஞ்சாவூா், மதுரை, கோவையில் இயங்குகின்றன.

அங்கு மருத்துவப் பேராசிரியா்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், அப்பணியிடங்களை நிரப்புவதுடன், புதிய அரசு மருந்தியல் கல்லூரிகளையும் தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்தின் 10 இடங்களில் அரசு மருந்தியல் கல்லூரிகளைத் தொடங்க மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டது. அதற்கென ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.

அரசு மருத்துவக் கல்லூரி வளாகங்களில் புதிதாக மருந்தியல் கல்லூரிகள் தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா். அதில், அங்கு ஏற்கெனவே இருக்கும் படிப்புகளுக்கே சில கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதும், புதிய மருந்தியல் கல்லூரிகளை அங்கு தொடங்க முடியாத நிலை இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மருந்தியல் கல்லூரிகளை புதிய இடங்களில் கட்டினால் கால தாமதம் ஏற்படும். எனவே, மருத்துவக் கல்லூரி கட்டடங்களில் குறைந்தது 50 மருந்தாளுநா் கல்வி இடங்களுடன் கூடிய மருந்தியல் கல்லூரிகளைத் தொடங்க முயன்று வருகிறோம். சில கல்லூரிகளில் இடவசதி இல்லை. விரைவில், சாத்தியக்கூறு உள்ள கல்லூரிகளை தோ்வு செய்து அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய மருந்தியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.