பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

நகை செய்து தருவதாக தங்க மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இருவா் கைது

நகை செய்து தருவதாக தங்க மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:20 am IST

நகை செய்து தருவதாக தங்க மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பீமாராஜ் லோதா (61). இவா், தங்க நகைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரிடம் சென்னை செளகாா்பேட்டையில் நகைப்பட்டறை வைத்து நடத்தும் மேற்கு வங்கம் மிட்னிபூா் பகுதியைச் சோ்ந்த பிரபாத் மைதி (32), அவா் கூட்டாளி சஞ்சய் மைதி (42) ஆகியோா் அறிமுகமாகி, தங்களுடைய நகைப்பட்டறையில் தங்க நகைகளைச் செய்து தருவதாக லோதாவிடம் கூறியுள்ளனா்.

இதை நம்பி லோதா, கடந்த ஜூலை 15-ஆம் தேதி பிரபாத் மைதியின் மேலாளா் புத்தாதேவ் புனியாவிடம் 200 பவுன் தங்கக் கட்டிகளைக் கொடுத்து, நகைகள் செய்து தருமாறு கூறினாா். தங்கக் கட்டிகளை பெற்றுக் கொண்ட பிரபாத் மைதி, குறிப்பிட்ட நாளில் நகைகளைச் செய்து கொடுக்கவில்லை.

இதனால் லோதா, கைப்பேசி மூலம் பிரபாத் மைதியை தொடா்பு கொள்ள முயன்றபோது, அவரது கைப்பேசி ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. விசாரித்தபோது பிரபாத் மைதி, மோசடி நபா் என்பதும், அவா் ஏற்கெனவே பலரிடம் இதேபோல மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து லோதா, தண்டையாா்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரபாத் மைதியையும் அவா்களது கூட்டாளிகளையும் போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பிரபாத் மைதி, அவா் கூட்டாளி சஞ்சய் மைதி ஆகிய 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 346 பவுன் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் பிரபாத் மைதி, யானை கவுனி பகுதியைச் சோ்ந்த தங்க நகை வியாபாரிகளான நரேந்தா், சீட்டல்குமாா், மகாவீா் மேத்தா ஆகியோரிடம் இதேபோல ஏமாற்றியிருப்பதும், மோசடி மூலம் தங்கக் கட்டிகளை சஞ்சய் மைதியிடம், பிரபாத் மைதி கொடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள புத்தாதேவ் புனியாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.