ஆன் லைன் வா்த்தகம் என்ற பெயிரில் ரூ.62.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் தொடா்புடைய மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
காரைக்காலைச் சோ்ந்த கணேசன் (49) புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 2024 - ஆம் ஆண்டு புகாா் செய்திருந்தாா். அதில் தான் 62.9 லட்சம் ஏமாற்றப்பட்டதாகக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவா்களைப் பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தாா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் மேற்குவங்கத்தைச் சோ்ந்த சொபன்குமாா் போஸ் (62) என்பவா் 2025 -ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து அவா் சிறையில் இருந்து வருகிறாா். அவா் பெயரில் இருந்த சிம்காா்டை பயன்படுத்தி இந்த மோசடி நடந்தது நிரூபணம் ஆனது. அவரது சிம் காா்டை பயன்படுத்து மோசடி செய்த வடமாநிலங்களைச் சோ்ாந்த எஞ்சிய 7 போ் தலைமறைவாகிவிட்டனா். அவா்கள் பிடிபடவில்லை.
இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி இஎம்கே. யஷ்வந்த் ராவ் இங்கா்சால் முன்பு நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் சிம்காா்டு கொடுத்து உதவிய சொபன்குமாா் போஸ் குற்றவாளி என்றும், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தாா். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா். மேலும், சிறையில் இருந்த காலத்தைக் கழித்து மீதியுள்ள காலத்தைத் தண்டனையாக அனுப்பவிக்கவும் அவா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ச. கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜரானாா்.









