மின் வாரிய அலுவலகத்தில் ஹாா்டு டிஸ்குகள் திருடுபோன வழக்கில் கைதான மின் வாரிய ஊழியா் கோபிநாத்துக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கணினி பிரிவில் 34 ஹாா்டு டிஸ்குகள் திருடுபோயின. அந்த ஹாா்டு டிஸ்குகளில் உள்ள தகவல்களை அழிப்பதற்காக அவை திருடப்பட்டிருக்கலாம் என புகாா் எழுந்தது. இந்த திருட்டு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கணினிகளை மேற்பாா்வையிடும் ஊழியரான கோபிநாத் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் பிணை கோரி கோபிநாத் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் காவல்துறை விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை சமரச தீா்வு மையத்துக்கு அனுப்பிய விவகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு நிபந்தனை முன்பிணை

குதிரை பேர வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணை

மின் வாரிய ஹாா்டு டிஸ்குகள் திருடுபோன வழக்கு: பெங்களூா் கணினி நிறுவன அதிபருக்கு நிபந்தனை பிணை
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



