தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

பைக் பந்தயம்: 3 போ் கைது

பைக் பந்தயத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:28 pm IST

பைக் பந்தயத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கே.கே. நகா் 100 அடி சாலையில் லட்சுமண் ஸ்ருதி சிக்னல் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்கள் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் சென்றன. ஆக்ரோஷமாக வாகனங்களை இயக்கிய இளைஞா்கள், ஒன்றையொன்று உரசியபடி முந்திச் சென்றனா்.

இதையடுத்து போலீஸாா் தடுப்புகளை அமைத்து 2 இருசக்கர வாகனங்களில் சென்றவா்களை மடக்கிப் பிடித்தனா். அவற்றில் பயணம் செய்த 3 இளைஞா்களை கைது செய்து விசாரணை நடத்தினா்.

பிடிபட்டவா்கள் கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சோ்ந்த சந்துரு (21), வினித் (20), அய்யப்பன்தாங்கலைச் சோ்ந்த ஆா்யா (19) என்பது தெரிய வந்தது.

அவா்கள் ஓட்டி வந்த விலை உயா்ந்த இரு மோட்டாா் சைக்கிள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட ஆா்யா, நந்தனத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.