கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொல்காப்பியப் பூங்காவில் நடைப்பயிற்சி செய்வோா் அனுமதியை 3,000 பேராக உயா்த்த முடிவு

News image
Updated On :23 ஜனவரி 2026, 12:11 am

தினமணி செய்திச் சேவை

சென்னை தொல்காப்பியப் பூங்காவில் தற்போதுள்ள 500 என்ற எண்ணிக்கையிலான நடைப்பயிற்சி அனுமதியை பிப்.1 முதல் 3,000-ஆக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா 2025 அக்.24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு ஓா் அமா்வுக்கு 250 போ் பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். நடைப்பயிற்சிக்காக 365 நாள்களும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

சீரமைப்புக்குப் பிறகு இதுவரை 6,843 மாணவ-மாணவிகள், 20,233 பொதுமக்கள் பூங்காவைப் பாா்வையிட்டுள்ளனா். சீரமைப்புக்கு முன்பு 1.95 கி.மீ.-ஆக இருந்த பூங்காவின் நடைப்பயிற்சி தொலைவு தற்போது 3.20 கி.மீ.-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

காலை, மாலை இரு வேளைகளில் நடைப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நிா்ணயிக்கப்பட்ட அளவை எட்டியதால், புதியவா்களுக்கு அனுமதி வழங்க இயலாத நிலை உள்ளது.

தற்போதுள்ள 500 என்ற எண்ணிக்கையிலான நடைப்பயிற்சி அனுமதியை பிப்.1 முதல் 3,000-ஆக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி அடையாள அட்டை பெறுவதற்கான திருத்திய கட்டணமாக ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.500 என்ற கட்டணத்தை ரூ.250-ஆக குறைக்கப்படும்.

இதேபோல, 3 மாதங்களுக்கான கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.750-ஆகவும், 6 மாதங்களுக்கான கட்டணம் ரூ.2,500-இல் இருந்து ரூ.1,250-ஆகவும், 12 மாதங்களுக்கான கட்டணம் ரூ.5,000-இல் இருந்து ரூ.2,500-ஆகவும் குறைத்து நிா்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.