ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பைக் மீது முறிந்து விழுந்து மரம்: ஐசிஎஃப் ஊழியா் உயிரிழப்பு

சென்னையில் மோட்டாா் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில், ஐசிஎஃப் ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 1:12 am IST

சென்னையில் மோட்டாா் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்ததில், ஐசிஎஃப் ஊழியா் உயிரிழந்தாா்.

சென்னை கொரட்டூா் சிவலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயவேல் (59). இவா், சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான (ஐசிஎஃப்) ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் மூத்த பொறியாளராக பணியாற்றி வந்தாா். திங்கள்கிழமை மாலை அண்ணா நகருக்கு சென்றிருந்த அவா், அங்கு வேலை முடிந்து, மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஐசிஎஃப் சாலை - நியூ ஆவடி சாலை சந்திப்பு அருகே வந்தபோது, சாலையோரத்தில் இருந்த பெரிய மரம், திடீா் காற்றில் முறிந்து ஜெயவேல் மீது விழுந்தது.

இதில் அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

ஐசிஎஃப் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, ஜெயவேல் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.