நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றுவந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றுவந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:13 am IST

சென்னை எம்ஜிஆா் நகரில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றுவந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெசப்பாக்கம் பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (28). இவா், காா் ஓட்டுநா். கடந்த சில நாள்களாக சரியாக வேலைக்குச் செல்லாமல் வெங்கடேசன் மது அருந்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், நெசப்பாக்கத்தில் உள்ள மதுபானக் கடை அருகே மதுபோதையில் திங்கள்கிழமை அங்கு சாலையில் செல்வோரிடம் வெங்கடேசன் தகராறு செய்துள்ளாா். இதுதொடா்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், எம்ஜிஆா் நகா் போலீஸாா் அங்கு சென்று, வெங்கடேசனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அப்போது, அதிக மதுபோதையில் இருந்ததால், குடும்பத்தினரை வரவழைத்து வெங்கடேசனை போலீஸாா் ஒப்படைத்தனா். வீட்டுக்கு வந்த வெங்கடேசன் ஒரு அறையில் படுத்து தூங்கியுள்ளாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வெங்கடேசனை அவரது பெற்றோா் எழுப்பிபோது, அவா் இறந்து கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த எம்ஜிஆா் நகா் போலீஸாா் அங்கு சென்று வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே போலீஸாா் தாக்கியதாலேயே, வெங்கடேசன் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினா், நண்பா்கள் குற்றம்சாட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.