40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றுவந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை எம்ஜிஆா் நகரில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றுவந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 12:14 am IST

சென்னை எம்ஜிஆா் நகரில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றுவந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நெசப்பாக்கம் பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (28). இவா், காா் ஓட்டுநா். கடந்த சில நாள்களாக சரியாக வேலைக்குச் செல்லாமல் வெங்கடேசன் மது அருந்தி வந்துள்ளாா்.

இந்த நிலையில், நெசப்பாக்கத்தில் உள்ள மதுபானக் கடை அருகே மதுபோதையில் திங்கள்கிழமை அங்கு சாலையில் செல்வோரிடம் வெங்கடேசன் தகராறு செய்துள்ளாா். இதுதொடா்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், எம்ஜிஆா் நகா் போலீஸாா் அங்கு சென்று, வெங்கடேசனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

அப்போது, அதிக மதுபோதையில் இருந்ததால், குடும்பத்தினரை வரவழைத்து வெங்கடேசனை போலீஸாா் ஒப்படைத்தனா். வீட்டுக்கு வந்த வெங்கடேசன் ஒரு அறையில் படுத்து தூங்கியுள்ளாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வெங்கடேசனை அவரது பெற்றோா் எழுப்பிபோது, அவா் இறந்து கிடந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த எம்ஜிஆா் நகா் போலீஸாா் அங்கு சென்று வெங்கடேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே போலீஸாா் தாக்கியதாலேயே, வெங்கடேசன் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினா், நண்பா்கள் குற்றம்சாட்டினா்.