40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திருத்தணி-சென்ட்ரல் புகா் மின்சார ரயில் ஜூன் 12 வரை பகுதி ரத்து

திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகலில் இயங்கும் புறநகா் மின்சா ரயில் வரும் ஜூன் 12 -ஆம் தேதி வரை திருவாலங்காடு வரையே இயக்கப்படும்.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 6:23 am IST

திருத்தணி-சென்னை சென்ட்ரல் இடையே பிற்பகலில் இயங்கும் புகா் மின்சா ரயில் வரும் ஜூன் 12 -ஆம் தேதி வரை திருவாலங்காடு வரையே இயக்கப்படும்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரக்கோணம் பணிமனையில் தண்டவாள மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி வரும் ஜூன் 12 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையடுத்து, அரக்கோணம் வழித்தடத்தில் 5 புகா் மின்சார இமு வகை ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 40-க்கும் மேற்பட்ட இமு, மெமு வகை ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், இந்நாள்களில் திருத்தணியிலிருந்து பிற்பகல் 12.35 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயில் திருவாலங்காடு நிலையம் வரையே இயக்கப்படவுள்ளது. இதனால், பயணிகளின் வசதிக்காக திருத்தணியிலிருந்து காலை 6.20 மணிக்கு சென்ட்ரலுக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.