தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிலையான திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ ரூ.1.59 கோடி ‘சிஎஸ்ஆா்’ நிதியை வழங்கியுள்ளது.
இதற்கான நிகழ்வில் வங்கியின் தலைவா் சி.எஸ்.செட்டி கலந்துகொண்டு, நிதியுதவிக்கான காசோலைகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தணீரு, கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா் ஆகியோரிடம் வழங்கினாா்.
இந்த நிதியுதவியின் ஒரு பகுதியாக, இதய நோயாளிகளுக்கு அவசர காலங்களில் உதவ ‘ஏஇடி’ கருவிகளை முக்கியப் பொது இடங்களில் நிறுவ ‘ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை டவா்ஸ்’ அறக்கட்டளைக்கு ரூ.99.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், நீலகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக்கு திடக்கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலையான வளா்ச்சி, சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில் எஸ்பிஐ மேற்கொண்டுள்ள இந்த முன்னெடுப்பு, நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதில் முக்கியப் பங்காற்றும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்பிஐ சொத்து மேலாண்மை ஐபிஓ: 2.77 மடங்கு கூடுதல் விண்ணப்பம்

சமுதாய மேம்பாட்டுக்கான பங்களிப்பு நிதியை தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்: அமைச்சா் லோகேஷ்தமிழ்ச்செல்வன்

தமிழக ஆளுநர் பேச்சால் வைகை காப்பாற்றப்படுகிறதா..?, காயப்படுகிறதா..?

ரூ.60,000 கோடி நிதி திரட்டும் எஸ்பிஐ
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



