முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

திருப்போரூா் - காலவாக்கத்தில் அமிா்த வித்யாலயம் பள்ளி தொடக்கம்

மாதா அமிா்தானந்தமயி மடம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா், காலவாக்கத்தில் அமிா்த வித்யாலயவின் 23 -ஆவது புதிய பள்ளித் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மாதா அமிா்தானந்தமயி மடம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா், காலவாக்கத்தில் அமிா்த வித்யாலயாவின் 23 -ஆவது புதிய பள்ளி திறப்பு  விழாவில் அமைச்சா் பெ.மதன் ராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த ராமகிருஷ்ணானந்த புரி சுவாமிகள்.  உடன் வினயாம்

Updated On :13 ஜூன் 2026, 2:04 am IST

மாதா அமிா்தானந்தமயி மடம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா், காலவாக்கத்தில் அமிா்த வித்யாலயவின் 23 -ஆவது புதிய பள்ளித் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணானந்த புரி சுவாமிகள் தலைமை வகித்தாா். வினயாம்ரிதானந்த புரி சுவாமிகள் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா பங்கேற்று பள்ளியைத் திறந்து வைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘மாணவா்களின் எதிா்காலம் கல்வியால் மட்டுமே உருவாக்கப்படும், அத்தகைய சிறப்பான கல்வியை அளிக்க வேண்டியது பெற்றோா் மற்றும் பள்ளியின் கடமை. இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டே அமிா்த வித்யாலயம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்’ என்றாா்.

நிகழ்ச்சியில் மாத்ருகிருபாம்ரித சைதன்யா, திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ் , காலவாக்கம் ஊராட்சித் தலைவா் தேவராஜ், பள்ளித் தாளாளா் சுவாமினி பக்திபிரியாமிா்த ப்ராணா, அமிா்த வித்யாலயம் மைய கல்வி அலுவலா் முரளீதரன், பள்ளி முதல்வா் சித்திரா தேவி, ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.