திருப்பதி-புதுச்சேரி இடையேயான தினசரி ‘மெமு’ ரயில் ஜூன் 24, 27 ஆகிய இரு நாள்கள் விழுப்புரத்துடன் நிறுத்தப்படும்.
இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், வரும் ஜூன் 24, 27 ஆகிய இரு நாள்களிலும் திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் ‘மெமு’ ரயில் விழுப்புரத்துடனும் நிறுத்தப்படும். அதேபோல் அந்நாள்களில் தாம்பரத்திலிருந்து காலை 9.40 மணிக்கு விழுப்பும் செல்லும் ‘மெமு’ ரயில் முண்டியம்பாக்கம் வரையே இயக்கப்படும். மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய ‘மெமு’ ரயில் பிற்பகல் 1.38 மணிக்கு முண்டியம்பாக்கத்திலிருந்து புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









