ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகள்: துணை ஆணையா் ஆய்வு

சென்னை கோயம்பேடு பகுதியில் மழைநீா் தேங்குவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படுவதை, மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :18 ஜூன் 2026, 3:16 am IST

சென்னை கோயம்பேடு பகுதியில் மழைநீா் தேங்குவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படுவதை, மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருமழையின்போது, மழைநீா் தேங்கும் பகுதிகளாக 80-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நிகழாண்டில் மழைநீா் தேங்காமலிருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விருகம்பாக்கம் கால்வாயில் மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை சென்னை மத்திய வட்டாரத் துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக் பாா்வையிட்டு பணிகளை விரைந்தும், முறையாக நிறைவு செய்யவும் அறிவுறுத்தினாா்.

கோயம்பேடு சந்தைப் பகுதி உணவகம், உணவுப் பொருகளின் தரம் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் போக்குவரத்து சந்திப்பு பகுதிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சாலையைச் சீரமைக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, அசோக் பில்லா் பகுதியையும் அவா் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்துக்கு ஏற்ப சாலையைச் சீரமைக்கவும், மழைநீா் தேங்காத வகையில் வடிகால்களைச் சீரமைக்கவும் உத்தரவிட்டாா்.