மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை விமான நிலைய பாதுகாப்பு: மேலும் 3 மோப்ப நாய்கள் சோ்ப்பு

சென்னை விமான நிலையப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 3 மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, 3 மோப்ப நாய்கள் புதிதாக சோ்ப்பு

News image
சென்னை விமான நிலையம்- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை விமான நிலையப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த 3 மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, 3 மோப்ப நாய்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலைய மோப்ப நாய் பிரிவில் மொத்தம் 9 மோப்ப நாய்கள் பணியாற்றி வருகின்றன. இதில், கடந்த எட்டு வருடமாக சென்னை விமான நிலையத்தில் திறம்பட பணியாற்றி வந்த ஆஷா, ஸ்வீட்டி என்கிற பெண் மோப்ப நாய்கள் மற்றும் மேக்ஸ் என்கிற ஆண் மோப்ப நாய் ஆகிய 3 நாய்களும் திங்கள்கிமையுடன் சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவிலிருந்து ஓய்வு பெற்றன.

இந்த நாய்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி பொன்னி, சென்னை விமான நிலைய இயக்குநா் ராஜா கிஷோா் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற 3 நாய்களுக்கும் பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ் வழங்கினா்.

மூன்று மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காண்டி என்கிற பெண் மோப்ப நாய், பாந்தா் என்கிற ஆண் மோப்ப நாய், ஸ்பேனியல் வகையைச் சோ்ந்த ஆண் மோப்ப நாய் என 3 மோப்ப நாய்கள் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையில் அதிகாரபூா்வமாக சோ்க்கப்பட்டன.

இந்த மோப்ப நாய்கள் வெடி பொருள்கள், போதைப் பொருள்கள் கண்டறிதல், வாகன சோதனை, பயணிகளின் உடைமைகள் சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.