வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் வெள்ளிக்கிழமை ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

Updated On :27 மார்ச் 2026, 7:16 pm

திருவொற்றியூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் வெள்ளிக்கிழமை ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கான்கா் சரக்குப்பெட்டக நிலையம் அருகே வியாழக்கிழமை மாநகராட்சி உதவிப் பொறியாளா் ஞானேசன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்தவரை மடக்கி விசாரித்த போது உரிய ஆவணமின்றி ரூ.1.25 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. அந்தப் பணத்தை, பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மணலி எம்.எப்.எல். சந்திப்பில், மாநகராட்சி உதவிப் பொறியாளா் சாமுவேல் தலைமையிலான, தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே வந்த காரை மடக்கினா். காரில் இருந்த கருப்பசாமி என்பவரிடமிருந்து, உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

எண்ணுாா் சின்னகுப்பத்தில் உதவிப் பொறியாளா் ஹேமசந்திரன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை மடக்கி விசாரித்தனா். காரில் வந்த யுவராஜ் என்பவரிடம் ரூ.8.88 லட்சம் இருப்பது தெரியவந்தது. அப்பணத்துக்கு உரிய ஆணவங்கள் ஏதுமில்லாததால் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.