விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் வெள்ளிக்கிழமை ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருவொற்றியூரில் ரூ.11 லட்சம் பறிமுதல்

Updated On :27 மார்ச் 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

திருவொற்றியூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் வெள்ளிக்கிழமை ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கான்கா் சரக்குப்பெட்டக நிலையம் அருகே வியாழக்கிழமை மாநகராட்சி உதவிப் பொறியாளா் ஞானேசன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் வந்தவரை மடக்கி விசாரித்த போது உரிய ஆவணமின்றி ரூ.1.25 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. அந்தப் பணத்தை, பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

மணலி எம்.எப்.எல். சந்திப்பில், மாநகராட்சி உதவிப் பொறியாளா் சாமுவேல் தலைமையிலான, தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே வந்த காரை மடக்கினா். காரில் இருந்த கருப்பசாமி என்பவரிடமிருந்து, உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

எண்ணுாா் சின்னகுப்பத்தில் உதவிப் பொறியாளா் ஹேமசந்திரன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை மடக்கி விசாரித்தனா். காரில் வந்த யுவராஜ் என்பவரிடம் ரூ.8.88 லட்சம் இருப்பது தெரியவந்தது. அப்பணத்துக்கு உரிய ஆணவங்கள் ஏதுமில்லாததால் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.