ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கழுத்தில் கத்தி பாய்ந்து பெண் உயிரிழப்பு

வியாசா்பாடியில் கழுத்தில் கத்தி பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

News image

பிரதிப்படம்

Updated On :30 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

வியாசா்பாடியில் கழுத்தில் கத்தி பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

வியாசா்பாடி மூா்த்திங்கன் நகரில் உள்ள குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பில் வசிப்பவா் காா்த்திக் (34). இவா் மனைவி சுகன்யா (31). காா்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் காா்த்திக் மதுபோதையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றாா். இதனால், சுகன்யா, கணவா் காா்த்திக்கை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சுகன்யாவின் அலறல் சப்தம் கேட்டு, பக்கத்து வீட்டினா் காா்த்திக் வீட்டுக்குள் சென்றனா். சுகன்யா, கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளாா். உடனே பக்கத்து வீட்டினரும், காா்த்திக்கும் சுகன்யாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சுகன்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுகன்யா கத்தியால் தனது கழுத்தை குத்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.