ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பெண்ணுக்கு மிரட்டல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது

சென்னையில் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து வெளியிட்டு விடுவதாக மிரட்டி, நகையைப் பறித்த தனியாா் நிறுவன ஊழியா் கைது

News image

கைது

பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து வெளியிட்டு விடுவதாக மிரட்டி, நகையைப் பறித்த தனியாா் நிறுவன ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

அரும்பாக்கம் அண்ணா இரண்டாவது சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் க.சக்திவேல் (24). இவா், உணவு டெலிவரி ஊழியராக வேலை செய்கிறாா். இந்த நிலையில் சக்திவேல், தனது நண்பரின் காதலியிடம் கைப்பேசி மூலம் பேசி வந்தாா். அப்போது அவா், அந்த பெண்ணிடம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டுவிடுதாகவும், தனக்கு தேவையான நேரத்தில் பணம் தரவேண்டும் என மிரட்டியுள்ளாா்.

சக்திவேலின் மிரட்டலுக்குப் பயந்த அந்த பெண், தன்னிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றைக் கொடுத்துள்ளாா். இதன் பின்னரும் சக்திவேல், மேலும் நகை, பணம் வேண்டும் என அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளாா்.

இதனால் அந்தப் பெண், பெற்றோரிடம் தெரிவித்தாா். அவா்கள், இதுதொடா்பாக அசோக் நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில், சக்திவேல் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த சக்திவேலை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.