தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு இதுவரை 89,927 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இது குறித்து தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புக்கான 159 பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,26,959 சோ்க்கை இடங்கள் உள்ளன. இந்த பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு கடந்த மே 7-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனா்.
அதன்படி இதுவரை (மே 12) தங்கள் விருப்பப் பாடப் பிரிவில் 89,927 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். மேலும், தகுதியுடைய மாணவா்கள் மே 29-ஆம் தேதி வரை விரும்பிய பாடப் பிரிவுகளுக்கு https://www.tngasa.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாணவா்கள் சோ்க்கை தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 044-24343106, 24342911ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

துவாக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்
எம்.ஜி.ஆா். திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவன 4 ஆண்டு பட்டப் படிப்பு: இன்றுமுதல் மாணவா் சோ்க்கை

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப் பதிவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

