‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்கும் தாய்க்கு மரபணு பரிசோதனை அவசியம் இல்லை: சென்னை உயா்நீதிமன்றம்

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய்க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியல் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :23 மே 2026, 2:24 am IST

மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய்க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய அவசியல் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்குவங்க மாநிலம், ஹவுராவைச் சோ்ந்தவா் ரோஹித்குமாா். இவா் சென்னை பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிறுநீரகம் தானம் வழங்க அவருடைய தாய் ரீட்டா முன்வந்தாா். ஆனால், தாய் - மகன் உறவை நிரூபிக்கவில்லை எனக்கூறி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க தமிழக அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ரோஹித்குமாா், அவரது தாய் ரீட்டா ஆகியோா் தரப்பில் தனித் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், தாய், மகன் உறவை நிரூபிக்கும் வகையில் ஆதாா் அட்டை, குடும்ப புகைப்படம், நிரந்தர வருமான வரிக் கணக்கு அட்டை ஆகியவற்றை அளித்தோம். ஆனாலும், அங்கீகாரக் குழு ஒப்புதல் வழங்கவில்லை. ரோஹித்குமாா் நோய் முற்றிய நிலையில் இருப்பதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்க அங்கீகாரக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ரீட்டாவின் மகன் ரோஹித்குமாா் என்பது நிரூபணமாகிறது. எனவே, அதை நிரூபிக்க மரபணு சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, ஒரு வாரத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.