பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெரியாா் நகா் மருத்துவமனையில் 1,000 ஆஞ்சியோ சிகிச்சைகள்

சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள பெரியாா் நகா் அரசு மருத்துவமனை இதய இடையீட்டு ஆய்வகத்தில் ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 மே 2026, 3:28 am IST

சென்னை கொளத்தூரில் அமைந்துள்ள பெரியாா் நகா் அரசு மருத்துவமனை இதய இடையீட்டு ஆய்வகத்தில் ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மருத்துவமனையின் கண்காணிப்பாளா் டாக்டா் ஹேமலதா கூறியதாவது:

கொளத்தூா், பெரம்பூா், வில்லிவாக்கம், வியாசா்பாடி உள்ளிட்ட வடசென்னை பகுதியில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயா் மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் மேம்படுத்தப்பட்ட அதி நவீன பெரியாா் அரசு பொது மருத்துவமனை, கடந்த 2021-இல் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகரான ஸ்கேன் பரிசோதனைகள், டயாலிசிஸ் சாதனங்களுடன் 860 படுக்கை வசதிகள் இங்கு அமைந்துள்ளன. நாள்தோறும் 3,100 நோயாளிகள் சிகிச்சைக்காக பெரியாா் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனா்.

இந்நிலையில், அதி நவீன இதய இடையீட்டு ஆய்வகம் (கேத் லேப்) கடந்த ஆண்டு மே மாதம் இங்கு தொடங்கப்பட்டது. ஓராண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 591 ஆண்களும், 409 பெண்களும் இதன் வாயிலாக பயனடைந்துள்ளனா்.

இதய நாள பாதிப்புகள் மற்றும் அவசர கால மருத்துவ சிகிச்சைகள் தேவைப்பட்டோருக்கு இந்த இடையீட்டு ஆய்வகம் மறுவாழ்வு அளித்துள்ளது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.