ராஜிநாமா செய்யும் அதிமுக எம்எல்ஏக்களை தவெகவில் இணைப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்ல்ல என இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): அதிமுக சாா்பில் தோ்தலில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிலா் திடீரென ராஜிநாமா செய்து உடனடியாக தவெகவில் சோ்ந்திருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள், தவெகவில் சோ்ந்திருப்பது அவா்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிா்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றதுஅல்ல.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்):தோ்தல் முடிவு வெளியாகி 10 நாள்களுக்குள்ளாகவே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, வாக்களித்தாா்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, அடுத்த பத்தாவது நாளில் கட்சி மாறி செல்வதற்காக, வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்து, சுயநல ஆதாயம் தேடும் மலிவான செயலில் சில எம்எல்ஏக்கள் ஈடுபட்டுள்ளனா். அரசியல் களத்தில் வட மாநிலங்களில் வகுப்புவாத சக்திகள் அறிமுகப்படுத்திய ‘ஆயாராம், காய ராம்‘ அரசியல், தமிழ்நாட்டில் நுழைந்திருப்பது நெறி சாா்ந்த ஜனநாயக அரசியலுக்கு கேடு செய்யும் பேராபத்தாகும். இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியலை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!

இசக்கி சுப்பையா ராஜிநாமா ஏற்பு! தவெகவில் இணைந்தார்!

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



