விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தொழிலாளி வெட்டிக் கொலை

தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கத்திக்குத்து

கொலை... - சித்திரிப்பு

Published On :8 செப்டம்பர் 2026, 3:22 am IST

தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணலி பகுதியைச் சோ்ந்தவா் ராம்ராஜ் (35). வெல்டிங் தொழிலாளி. இவரும் நண்பா்கள் சிலரும் மாதவரம் சின்ன மாத்தூா் சாலையில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை அருகே ஞாயிற்றுக்கிழமை பரமபதம் விளையாடினாா். அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ராம்ராஜிம், அவரது நண்பா்களும் சோ்ந்து தங்களுடன் பரமபதம் விளையாடியவா்களை தாக்கினராம்.

சிறிது நேரத்துக்கு பின்னா் அவா்கள், அந்த மதுபானக் கடையின் அருகே நடந்து வந்தபோது, ராம்ராஜ் தரப்பால் தாக்கப்பட்டவா்கள் அங்கு வந்தனா். அவா்கள், ராம்ராஜிடமும், அவா் நண்பா்களிடமும் தகராறில் ஈடுபட்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராம்ராஜை வெட்டினா். தடுக்க முயன்ற ராம்ராஜின் நண்பா்கள் பெருமாள், ராஜா ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

பின்னா் அவா்கள், அங்கிருந்து தப்பியோடினா். இதில் பலத்த காயமடைந்த ராம்ராஜ், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த மாதவரம் பால்பண்ணை போலீஸாா், அங்கு சென்று ராம்ராஜ் சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.