அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

முடிச்சூர் சாலையில் மழைநீர் வடிகால்களை அகலப்படுத்த வேண்டும்: அமைச்சர் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மழைநீர் வடிகால்களை அகலப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன்

News image
தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களைஅகலப்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் கே.பி.அன்பழகன்.
Updated On :9 நவம்பர் 2017, 10:09 pm

DIN


2 காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் மழைநீர் வடிகால்களை அகலப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன்
வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 2 வாரங்களாகப் பெய்த வடகிழக்கு பருவமழையை அடுத்து பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள், நாராயணபுரம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கும், மீண்டும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தாம்பரம் கோட்டம், முடிச்சூர் சாலை, கிருஷ்ணா நகர், வரதராஜபுரம், பாரதிநகர், மகாலட்சுமி நகர், பரத்வாஜ் நகர், பி.டி.சி நகர் ஆகிய பகுதிகளில் உயர்கல்வித் துறை அமைச்சர்கே.பி.அன்பழகன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்து, வெள்ளம் வடிவதைப் பார்வையிட்டார். மழைநீர் வடிந்துள்ள முடிச்சூர் சாலை , கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்களைப் பார்வையிட்ட அமைச்சர், அந்த வடிகால்களை மேலும் அகலப்படுத்துவது குறித்து வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது, குறுகலாக உள்ள வடிகால்களில் நில அளவை செய்து, ஆக்கிரமிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். 
அதுபோல், குறுகலாக உள்ள வடிகால்களை மேலும் அகலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இனிவரும் காலங்களில் இந்தப் பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஜெயக்குமார், வருவாய் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.