கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பெண் அடித்துக் கொலை

கல்பாக்கம் அருகே கணவர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பெண் தனது கணவர் குடும்பத்தினர் வீட்டிற்குச் சென்றபோது உறவினர்களால் தாக்கப்பட்டதில் இறந்தார்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


கல்பாக்கம் அருகே கணவர் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பெண் தனது கணவர் குடும்பத்தினர் வீட்டிற்குச் சென்றபோது உறவினர்களால் தாக்கப்பட்டதில் இறந்தார்.
செங்கல்பட்டை அடுத்த கல்பாக்கம் அருகில் உள்ள ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (30). ஆட்டோ ஓட்டுநர். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்பாக்கத்தை அடுத்த கிழக்கு கடற்கரைச் சாலை பாலம் ஒன்றின் அருகில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொலையுண்ட செல்வத்தின் மனைவி சந்திரமதி (27) உள்பட சிலரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
இந்நிலையில், சந்திரமதி அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். அவர் ஆயப்பாக்கத்தில் உள்ள தனது குழந்தைகளைப் பார்ப்பதற்காகச் சென்றார். அப்போது, செல்வத்தின் கொலை காரணமாக வருத்தத்தில் 
இருந்த அவரது உறவினர்கள், சந்திரமதியைக் கண்டதும் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கினர். இதில் சந்திரமதி காயமடைந்தார். தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரமதியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சந்திரமதியை அடித்துக் கொலை செய்தவர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.