உத்தரமேரூர் அருகே மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
உத்தரமேரூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (25). இவர், சனிக்கிழமை மதுராந்தகத்திலிருந்து, இரு சக்கர வாகனத்தில் நெல்வாய் இணைப்புச் சாலை அருகே சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலையோர வேப்ப மரத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.