உத்தரமேரூர் அருகே சாலையில் சென்ற பைக் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் இருவர் இறந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த அலத்திரை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி(29). அவர் தனது அண்ணி ரேகாவுடன் (28) ஒரகடத்துக்கு அலுவலகப் பணி நிமித்தமாக, தனது பைக்கில் அலத்திரையில் இருந்து புறப்பட்டார். உத்தரமேரூரை அருகே பென்னலூர் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது பைக் நிலைதடுமாறியதில் இருவரும் சாலையோரம் விழுந்தனர்.
இதில் சிவசக்தி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரேகா பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து உத்தரமேரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மனநிறைவு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 09)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 9 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு எப்படி?

செபி-யிடம் 400 ஜிபி ஆவணங்கள் சமா்ப்பிப்பு!

திருத்தணி - சென்ட்ரல் புறநகா் மின்சார ரயில் ஜூன் 12 வரை பகுதி ரத்து
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


