காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளரும், அவரது மனைவியும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) வீட்டினுள் மயங்கிய நிலையில் இறந்து கிடந்தனர்.
காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள ராமசாமி நகரில் வசித்து வந்தவர் ஏகம்பன்(71). இவர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அன்னபூரணி(69) இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில் மருத்துவர்கள் இருவரையும் வீட்டில் சில நாட்கள் தனிமையில் இருக்குமாறும் அறிவுறுத்தியிருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வசித்து வந்த வீடு திங்கள்கிழமை திறக்காமல் இருப்பதைக் கண்டு அருகில் உள்ளவர்கள் அவர்களது சென்னையில் வசிக்கும் மகன்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மகன்கள் வந்து பார்த்த போது வீட்டிற்குள் இருவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. கணவனும், மனைவியும் ஓரே நேரத்தில் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


