அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காஞ்சிபுரம் அருகே ரூ.1.49 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும்படையினர் நடவடிக்கை

காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தின் சோதனைச் சாவடியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.49லட்சத்தை திங்கள்கிழமை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

News image
Updated On :20 செப்டம்பர் 2021, 8:00 am

DIN

காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தின் சோதனைச் சாவடியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.49லட்சத்தை திங்கள்கிழமை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டு ஆங்காங்கே அதிகாரிகள் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பறக்கும்படை வட்டாட்சியர் வரதராஜன் தலைமையிலான குழுவினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் எந்த வித ஆவணங்களுமின்றி ரூ.1,49,800 இருந்தது தெரிய வந்தது. அப்பணத்தை பறிமுதல் செய்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடம் ஒப்படைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.