மத்தியப் பிரதேசத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் 50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறுகிறது. முகக்கவசம், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது.