‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செம்பரம்பாக்கம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியது

நேற்று பெய்த மழை காரணமாக, கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியது.

News image

செம்பரம்பாக்கம் ஏரி

Updated On :20 ஜூன் 2022, 5:55 am

DIN

காஞ்சிபுரம்: நேற்று பெய்த மழை காரணமாக, கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரி  முழு கொள்ளளவை எட்டியது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக ,கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.

செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் உயரம் 24 அடியில், 23.36 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், 3,475 மில்லியன் கன அடியாகவும், நேற்று இரவு பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் காரணமாக வினாடிக்கு 1700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது ஏரி முழு கொள்ளளவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதி நீர நிறுத்துப்படுமா அல்லது உபரி நீர்  வெளியேற்றலாமா என பொதுப்பணித்துறை அதிகாரிகள்  ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் ஏரியின் நீர்  மட்ட உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொது பணித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.