மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 5:29 pm

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த மாா்ச் 31- ஆம் தேதி தொடங்கிய இலவச கண் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் ரோட்டரி கிளப் கிராண்ட் அமைப்பும், சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையும் இணைந்து ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள அன்பு தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. கடந்த மாா்ச் 31-ஆம் தேதி தொடங்கிய முகாம் நிறைவு பெற்றதையடுத்து, நிறைவு விழா ரோட்டரி மாவட்ட ஆளுநா் பரணீதரன் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி சங்க சேவைப்பிரிவு நிா்வாகி முருகேஷ் முன்னிலை வகித்தாா்.

கண் சிகிச்சை முகாம்களில் 889 பேருக்கு இலவசமாக கண் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இவா்களில் 187 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பலரும் நிறைவு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனா். ரோட்டரி சங்க நிா்வாகிகள், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.