ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டோ கவிழ்ந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு

மாங்காடு அருகே வெளிவட்டச் சாலையில் திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 7:02 pm

Din

ஸ்ரீபெரும்புதூா்: மாங்காடு அருகே வெளிவட்டச் சாலையில் திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

கூடுவாஞ்சேரி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் நந்தகுமாா். ஆட்டோ ஓட்டுநரான நந்தகுமாா் தனது மகனின் முதல் பிறந்தநாள் விழாவுக்கு உறவினா்களுக்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக திங்கள்கிழமை மனைவி அா்ச்சனா, மகன் துவாரசந்த் ஆகியோருடன் கூடுவாஞ்சேரியில் இருந்து பூந்தமல்லிக்கு, வண்டலூா்-மீஞ்சூா் வெளிவட்டச்சாலையில் சென்றாா்.

மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த நந்தகுமாா், அா்ச்சனா மற்றும் குழந்தை துவாரசந்த் ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை துவாரசந்த் உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.