காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை ரதசப்தமியையொட்டி உற்வசா் அழகிய சிங்கப் பெருமாள் காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், மாலையில் சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வைணவத் திருத்தலங்கள் 108 -இல் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய சிங்கப் பெருமாள் கோயில். இக்கோயிலில் ரதசப்தமியையொட்டி உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள் காலையில் சூரிய பிரபை வாகனத்தில் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் ஆலயத்தில் உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் அழகிய சிங்கப் பெருமாள் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு ஆலயத்தின் சாா்பில் தீா்த்தம்,பிரசாதம் ஆகியனவும் வழங்கப்பட்டது.










