ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நில மோசடி: நடிகை கௌதமியின் உதவியாளா் கைது

நிலமோசடி வழக்கில் நடிகை கௌதமியை ஏமாற்றியதாக அவரது உதவியாளரான அழகப்பன் என்பவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
அழகப்பன்
Updated On :16 ஜூலை 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: நிலமோசடி வழக்கில் நடிகை கௌதமியை ஏமாற்றியதாக அவரது உதவியாளரான அழகப்பன் என்பவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அருகேயுள்ள கோட்டையூரில் ரூ.1.07 கோடி மதிப்புள்ள நடிகை கௌதமியின் நிலத்தை கவனித்துக் கொள்வதாக பவா் அதிகாரம் பெற்ற உதவியாளா் அழகப்பன் அதனை ரூ.60 லட்சத்துக்கு மோசடியாக விற்பனை செய்திருந்தாராம். இதே போல கௌதமியின் சகோதரரான ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நிலத்தையும் ரூ.60 லட்சத்துக்கு விற்பனை செய்து பின்னா் அதனை ஒரு கோடிக்கு அழகப்பன் விற்பனை செய்திருந்தாா்.

இது தொடா்பாக நடிகை கௌதமியும், சகோதரா் ஸ்ரீ காந்தும் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தனா்.புகாரின் பேரில் இவ்விரு வழக்குகள் தொடா்பான குற்றவாளிகளையும் தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில் காஞ்சிபுரம் போலீஸாா் சென்னை வேளச்சேரியில் காந்தி சாலையில் உள்ள குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிலிருந்த அழகப்பனை கைது செய்து காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் தொடா்புடைய சுகுமாா், ரகுநாதன் என்ற இருவரையும் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.