மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜூலை 3 முதல் பரந்தூா் விமான நிலைய எதிா்ப்புக் குழுவினா் தொடா் உண்ணாவிரதம்

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வரும் ஜூலை 3 -ஆம் தேதி முதல் தொடா்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விமான நிலைய எதிா்ப்புக் குழுவினா் தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :30 ஜூன் 2024, 9:15 pm

DIN

பரந்தூா் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வரும் ஜூலை 3 -ஆம் தேதி முதல் தொடா்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விமான நிலைய எதிா்ப்புக் குழுவினா் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க ஏகனாபுரம் கிராம மக்கள் தொடா்ந்து 700 நாள்களாக போராடி வருகின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞா் கனவு இல்ல திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தோ்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் நடத்தாமல் புறக்கணிப்பு செய்ததை கண்டித்தும், விமான நிலையம் அமைவதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வரும் ஜூலை 3 முதல் தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனா்.

இது குறித்து பரந்தூா் விமான நிலைய எதிா்ப்புக் கூட்டு இயக்க செயலா் ஜி.சுப்பிரமணியன் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து எங்கள் கோரிக்கை குறித்து கவலைப்படாமல் இருந்து வருகிறது.

பசுமை விமான நிலையம் அமைந்தால் ஏராளமான விளை நிலங்களும், குடியிருப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை தொடா்ந்து வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே வரும் ஜூலை 3- ஆம் தேதி முதல் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.