காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு வாள்வீச்சுக் கழகம், காஞ்சிபுரம் மாவட்ட வாள்வீச்சு சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டிகளை காஞ்சிபுரம் அருகேயுள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடத்துகின்றன. தொடக்க விழாவுக்கு மாநில வாள்வீச்சுப் போட்டி அட்டாக் கமிட்டி தலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். பட்டயக் கணக்காளா் ராஜசேகரன், மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சங்க காஞ்சி மாவட்ட செயலாளா் முருகேசன் வரவேற்றாா். முதல் நாள் 14 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவு வாள்வீச்சுப் போட்டிகளும், 2-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு வாள்வீச்சுப் போட்டிகளும் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு எம்எல்ஏ எழிலரசன் பரிசுகள் வழங்குகிறாா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சிகளின் தோ்தல் பிரசாரம் நிறைவு!

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு

காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

