பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டி தொடக்கம்

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.

Updated On :2 மார்ச் 2024, 11:55 pm

காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு வாள்வீச்சுக் கழகம், காஞ்சிபுரம் மாவட்ட வாள்வீச்சு சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டிகளை காஞ்சிபுரம் அருகேயுள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடத்துகின்றன. தொடக்க விழாவுக்கு மாநில வாள்வீச்சுப் போட்டி அட்டாக் கமிட்டி தலைவா் தனசேகரன் தலைமை வகித்தாா். பட்டயக் கணக்காளா் ராஜசேகரன், மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.சங்க காஞ்சி மாவட்ட செயலாளா் முருகேசன் வரவேற்றாா். முதல் நாள் 14 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவு வாள்வீச்சுப் போட்டிகளும், 2-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு வாள்வீச்சுப் போட்டிகளும் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு எம்எல்ஏ எழிலரசன் பரிசுகள் வழங்குகிறாா்.