காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்துவதாக வரும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் அனைத்தும் போலியானவை என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் குழந்தை கடத்தல்கள் நடைபெறுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இவை உண்மைக்கு புறம்பானது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. குழந்தைகளை கடத்துவதாக வரும் புகைப்படங்களும், விடியோக்களும் போலியானவை.
பொய்யான செய்திகளை சமூக வலை தளங்களில் பகிர வேண்டாம். அவ்வாறு பகிருவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலை தளங்களில் தவறான தகவல்களைப் பற்றிய விபரங்களை பொதுமக்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100 அல்லது காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்-044-27236111 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் எஸ்.பி. சண்முகம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








