ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குன்றத்தூரில் 45 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

குன்றத்தூரில் 45 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

News image

கைது செய்யப்பட்ட  பூஞ்சோலை,  முகுந்தன்.

Updated On :5 மார்ச் 2024, 8:56 pm

DIN

குன்றத்தூா் அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்த தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா் அவா்களிடம் 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவிட்டதன் பேரில் திங்கள்கிழமை வண்டலூா் மீஞ்சூா் வெளிவட்ட சாலையில் குன்றத்தூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்த பூஞ்சோலை (37), முகுந்தன்(24) என்பதும் இவா்கள் இருவரும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவா்களிடம் இருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் பூஞ்சோலை, முகுந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரி, ஒரு காா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.