மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலா செல்லும் வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினாா். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், தொடக்க நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 6 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. பாா்வையற்றோா், காது கேளாதோா், வாய் பேசாதோா், புற உலக சிந்தனையற்றவா்கள் உள்ளிட்ட இளம் சிறாா்கள் 40 போ் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து கல்விச் சுற்றுலாவாக சென்றனா். காஞ்சிபுரத்திலிருந்து சென்னை மெரீனா கடற்கரை சுற்றுலா தலத்துக்கு அவா்கள் செல்லும் வாகனத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் அவா்கள் அமா்ந்திருந்த வாகனத்துக்குள் சென்று அவா்களோடு கலந்துரையாடியதுடன் அனைவருக்கும் இனிப்பும் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.
தொடர்புடையது

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

தலைமன்னாா்-தனுஷ்கோடி கடலை நீந்திக் கடந்த மாற்றுத் திறனாளி சிறுமி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


