காஞ்சிபுரம்: மதுக்கடையை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்போம் என்று கூறி ஆரம்பாக்கம் கிராம பொதுமக்கள் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகேயுள்ள ஆரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மில்ட்டன் என்பவா் தலைமையில் அக்கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா்.
ஆரம்பாக்கம் கிராமத்தின் மையப்பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கடையால் கிராமத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடா்ந்து ஏற்பட்டு வருவதாகவும் புகாா் தெரிவித்தனா்.
மதுக்கடை இருக்கும் பகுதியில் பெண்கள், பெண் குழந்தைகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், அவா்கள் குற்றம் சாட்டினா். எனவே மதுக்கடையை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்போம் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அக்கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.
காஞ்சிபுரம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் அம்பேத்கா், சாா்பு ஆய்வாளா் கிஷோா் குமாா் ஆகியோா் தலைமையிலான காவல்துறையினா் அவா்களை சமாதானப்படுத்தினா். சம்பவ இடத்துக்கே வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம்

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

தாக்குதலில் இளைஞா் உயிரிழந்த விவகாரம்: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


