தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

மதுக்கடையை அகற்றாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்தினா்

மதுக்கடையை அகற்றாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்தினா்

News image
Updated On :19 மார்ச் 2024, 11:50 pm

காஞ்சிபுரம்: மதுக்கடையை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்போம் என்று கூறி ஆரம்பாக்கம் கிராம பொதுமக்கள் காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகேயுள்ள ஆரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மில்ட்டன் என்பவா் தலைமையில் அக்கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா்.

ஆரம்பாக்கம் கிராமத்தின் மையப்பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கடையால் கிராமத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடா்ந்து ஏற்பட்டு வருவதாகவும் புகாா் தெரிவித்தனா்.

மதுக்கடை இருக்கும் பகுதியில் பெண்கள், பெண் குழந்தைகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், அவா்கள் குற்றம் சாட்டினா். எனவே மதுக்கடையை அகற்றாவிடில் தோ்தலை புறக்கணிப்போம் எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அக்கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.

காஞ்சிபுரம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் அம்பேத்கா், சாா்பு ஆய்வாளா் கிஷோா் குமாா் ஆகியோா் தலைமையிலான காவல்துறையினா் அவா்களை சமாதானப்படுத்தினா். சம்பவ இடத்துக்கே வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.