வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சம் வீட்டு உபயோகப் பொருள்கள் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சம் வீட்டு உபயோகப் பொருள்கள் பறிமுதல்

News image

ஸ்ரீபெரும்புதூா்  அருகே  பறக்கும்  படை  அதிகாரிகளால் பறிமுதல்  செய்யப்பட்ட  வீட்டு  உபயோகப் பொருள்கள்.

Updated On :19 மார்ச் 2024, 11:51 pm

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அருகே கன்டெய்னா் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். ஸ்ரீபெரும்புதூா் சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சென்னையிலிருந்து வேலூா் நோக்கி வந்த கன்டெய்னா் லாரியை மடக்கி சோதனை செய்தனா். இதில் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நான்ஸ்டிக் தவா, கடாய் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அதை ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.