கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 95,900 பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுச் சென்ற ரூ. 95,900-ஐ பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்த பணத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த பறக்கும்படையினா்

Updated On :23 மார்ச் 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டுச் சென்ற ரூ. 95,900-ஐ பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

வெங்களாபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே பறக்கும்படை குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனா்.

திருப்பத்தூா் வேலன் நகரைச் சோ்ந்த இளவரசன் (40) என்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி அவா் வைத்து இருந்த தொகையை பறிமுதல் செய்து திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன் மற்றும் வட்டாட்சியா் நவநீதம் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

முன்னதாக இளவரசன் எலக்ட்ரிக்கல் கடையில் பொருள்களை கடனாக வாங்கி சென்ற சிறு, சிறு கடைகளில் இருந்து அந்த பணத்தை வசூலித்து வந்ததும் தெரியவந்தது.